காலங்கள் கழிந்தன
காட்சிகள் மாறின
கரைந்துவிட்ட நினைவுகள்
கனவாகிப்போன காதல்
பிரிவின் நொடியில்
காதல் மலருமென்று
இதற்கு முன் நம்பவில்லை
பிரிந்த பின்பு புரிந்தது....
சிணுங்கும் அலைபேசியில்
உன் குரல் கேட்க
மனம் தவித்தப் போதும்
வேலை பலு தடுத்தது ...
தூரங்கள் நமது எதிரியானபோதும்
தூவானமாய் உன் நினைவு.....